Browsing: Health

அறிமுகம் : துளசிக்கு என்று பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. துளசியில் ஏராளமான மருத்துவ குணங்கள் பொதிந்து கிடப்பதால் தான் மக்கள் அதை பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி வருகிறார்கள். இந்து மதத்தின் படி இந்த துளசி இலைகளை புனித துளசி என்று அழைக்கின்றனர். இந்த துளசி பெரும்பாலும் தேநீரில் சுவையை சேர்க்க பயன்படுகிறது. இது ஆரோக்கியத்திற்கென்று பல நன்மைகளை வழங்க கூடியது. இதைக் கொண்டு பல வீட்டு வைத்தியங்கள் செய்யப்படுகிறது. ​ஊட்டச்சத்துக்கள் : துளசி குணப்படுத்தும் பண்புகளை கொண்டுள்ளது. துளசி இலைகளில் வைட்டமின் ஏ, வைட்டமின் டி, இரும்பு மற்றும் நார்ச்சத்துக்கள் நிரம்பியுள்ளன. இவை உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் தொற்று நோய்களை தடுக்கவும் உதவுகிறது. துளசி இலைகளை வெறும் வயிற்றில் உட்கொள்வது உங்களுக்கு நன்மை அளிக்கும். ​மன அழுத்தத்தை போக்கும் : துளசி இலைகளில் அடாப்டோஜன்கள் நிறைந்துள்ளன. அவை உங்கள் உடலில் உள்ள மனஅழுத்த அளவைக் குறைக்க உதவும்.…

Read More

அறிமுகம் : சுண்டைகாய் கத்தரிக் குடும்பத்தைச் சார்ந்த புதர்ச்செடி ஆகும். சுண்டை காய் கைப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டது. நமது நாட்டின் வீட்டு தோட்டங்களிலும், ஈரமான நிலங்களிலும் தானாகவே சுண்டை செடி வளர்கிறது. சுண்டை காய்கள் பழங்காலம் முதலே நமது நாட்டு மருத்துவத்தில் பயன்படுதப்பட்டு வருகிறது. அந்த சுண்டைக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள். வயிற்றுப் பூச்சி : நமது வயிறு என்பது நாம் உண்ணும் உணவை செரிமானம் செய்து நமக்கு சத்து அளிக்க உதவும் ஒரு உறுப்பாகும். நுண்ணுயிரிகள் நிறைந்த உணவுகளை சிலர் அதிலும் குறிப்பாக குழந்தைகள் சாப்பிடுவதால் அவர்களின் வயிற்றில் பூச்சி தொல்லை ஏற்படுகிறது. சுண்டக்காய் பக்குவம் செய்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் பூச்சிகளை அழித்து குடல், வயிறு சுத்தமாகும். பசியுணர்வு : ஒரு நாளில் மொன்று வேளையும் சாப்பிடுவதற்கு முன்பாக வயிற்றில் பசி உணர்வு ஏற்படுவதே உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு சிறந்த அறிகுறியாகும். சிலருக்கு உடல் நிலை…

Read More

அறிமுகம் : உணவில் நாம் அறுசுவைகள் எனும் இனிப்பு, கசப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு மற்றும் உவர்ப்பு. போன்ற சுவைகளை சமச்சீராக சேர்த்து வர, அவை உடலின் ஆற்றல் நிலையை, சமநிலைப்படுத்துகிறது, இதில் பாதிப்பு ஏற்படும்போது, சுவையை உணரும் நரம்புகள், செயல் இழந்து, உணவில் நாட்டம் குறைந்து, பசியின்மை உண்டாகிறது. சிறு குழந்தைகளுக்கு அன்னையர் சோறு ஊட்டும்போது, சமயங்களில் குழந்தைகளுக்கு உணவு செரிமானத்தில் பாதிப்புகள் ஏற்பட்டு, உணவை வெறுப்பர், அந்த சமயங்களில் உணவில் சிறிது மாவடுத் துண்டைக் கலந்து ஊட்டும்போது, குழந்தைகள் உற்சாகத்துடன் உணவை உண்ண ஆரம்பிப்பர். மாவடுவில் உள்ள துவர்ப்பும், புளிப்பும் கலந்த உவர்ப்பு சுவை, குழந்தைகளின் சுவை நரம்பில் ஈர்ப்பை உண்டாக்கி, உணவை மீண்டும் சாப்பிடக் காரணமாகும். நாவின் சுவை நரம்பை செயல்பட வைக்கும் : அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமே நஞ்சாகும்போது, ஊறுகாயும் அப்படித்தான், உணவில் கடைசியாகத் தான் ஊறுகாய் என்று முன்னோர் கூறியுள்ளனர், உணவின் ஆரம்பத்தில் சுவை…

Read More

அறிமுகம் : இது கற்றாழை குடும்பத்தைச் சேர்ந்தது. இந்த பழம் மெக்சிகோவில் பயிரிடப்படுகிறது. இப்போது தமிழகத்திலும் கிடைக்கிறது. இந்த பழம் சிவப்பு நிறத்தில் உள்ளது. உட்புறம் கிவி பழம் போல் இருக்கும். ஒரு பழத்தின் எடை 700-800 கிலோ. இதன் சுவை தர்பூசணி மற்றும் பேரிக்காய் போன்ற இனிப்பு மற்றும் புளிப்பு. மேலும் இந்த பழத்தில் ரசாயனங்கள் இல்லை. சரி, கீழே உள்ள டிராகன் பழத்தின் நன்மைகளைப் பற்றி விரிவாகப் பார்ப்போம். டிராகன் பழங்கள் : சிவப்பு தோல் கொண்ட சிவப்பு பழம்சிவப்பு தோல் கொண்ட வெள்ளை பழம்மஞ்சள் தோலுடன் மூன்று வகையான வெள்ளை பழங்கள் உள்ளன. டிராகன் பழ ஊட்டச்சத்து : டிராகன் பழம் கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்துக்கான ஆரோக்கியமான ஆதாரமாகும். பழங்களில் உள்ள சிக்கலான சர்க்கரைகள் பதப்படுத்தப்பட்ட சர்க்கரைக்கு சிறந்த மாற்றாகும். டிராகன் பழத்தில் உள்ள நார்ச்சத்து இரைப்பைக் குழாயில் நன்மை பயக்கும் பாக்டீரியாக்களை பராமரிப்பதில் முக்கியமானது. அதிக…

Read More

அறிமுகம் : ராஸ்பெர்ரி என்பது ரோஜா குடும்பத்தின் ருபஸ் இனத்தைச் சேர்ந்த பல தாவர இனங்களின் உண்ணக்கூடிய பழமாகும். அவற்றில் பெரும்பாலானவை ஐடாயோபாட்டஸ் என்ற துணை இனத்தில் உள்ளன. இந்த பெயர் தாவரங்களுக்கும் பொருந்தும். மூளை ஆரோக்கியம் : ராஸ்பெர்ரி பழத்தில் ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் சரியான விகிதத்தில் உள்ளன.குறிப்பாக ஃபிளாவனாய்டுகள் மூளையின் வலிமையை மேம்படுத்த உதவுவதாக அறியப்படுகிறது. ராஸ்பெர்ரி பழங்களை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் மூளையின் செயல் பாட்டை மேம்படுத்துவதோடு, ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. நீரிழிவு மேலாண்மை : ராஸ்பெரி பழம் பைட்டோ நியூட்ரியண்டுகளின் சிறந்த மூலமாகும். இது சில ஹார் மோன்களுடன் இணைந்து இரத்த சர்க்கரை அளவை சமநிலைப் படுத்துகிறது. ராஸ்பெரி பழங்களை முழுவதாகவோ அல்லது சாறு பிழிந்து ஜுசாக தொடர்ந்து உட்கொள்வது டைப் -2 நீரிழிவு நோயின் அறிகுறிகளைக் குறைக்க உதவும். எடை இழப்பு : இதில் உள்ள நார்ச் சத்து பசி உணர்வை கட்டுப்படுத்துகிறது. மெக்னீசியம்…

Read More

லிச்சிப் பழம் : லிச்சி பழத்தில் அதிகளவு நார்ச்சத்து நிறைந்துள்ளது. எனவே செரிமான பிரச்சனைகள் உள்ளவர்கள் மற்றும் வயிற்று கோளாறுகள் உள்ளவர்கள் இந்த லிச்சிப் பழம் அதிகளவு உட்கொள்ளவது மிகவும் நல்லது. இதில் உள்ள வைட்டமின் சி, உடலின் இரும்புச் சத்தை உறிஞ்சும் திறனை அதிகரிக்கும். இதன் காரணமாக இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி அதிகரித்து, இரத்த சோகை வரும் வாய்ப்பு குறையும். உடல் எடை : லிச்சி பழத்தை அதிகளவு உட்கொள்ளவதினால் உடல் எடையை வேகமாக குறைத்து விட முடியும். ஏனெனில் இந்த லிச்சி பழத்தில் இருக்கும் நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து அதிகளவு நிறைந்துள்ளது. எனவே நம் உடலுள் சேரும் தேவையற்ற கொழுப்புகளை வெளியேற்றி உடலை ஸ்லிம்மாக வைத்துக்கொள்ள இந்த லிச்சி பழம் பெரிதும் உதவுகிறது. புற்றுநோய் எதிர்ப்பு : லிச்சி பழத்தில் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு பொருள் உள்ளதால், இந்த லிச்சி பழத்தை பெண்கள் அதிகளவு…

Read More

மங்குஸ்தான் பழம் : மரங்கள் மனிதர்கள் உண்பதற்கு சுவையான பழங்களை தருகின்றன. அந்த வகையில் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் அதிகம் விளையும் பழமாகவும், அதிக மக்களால் சாப்பிடப்படும் ஒரு பழமாகும் மங்குஸ்தான் பழம் இருக்கிறது. மங்குஸ்தான் பழங்களை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம். உடல் எடை கூட : நவீன மருத்துவ அளவுகோலின் படி ஒவ்வொரு மனிதரும் அவரின் உடல் உயரத்திற்கு ஏற்ற அளவில் உடல் எடை பெற்றிருக்கவேண்டும் என அறிவுறுத்துகிறது. ஒரு சிலர் சராசரி உடல் எடைக்கு கீழாக இருக்கின்றனர். இத்தகையவர்கள் சீக்கிரம் உடல் எடை கூட்ட அடிக்கடி மங்குஸ்தான் பழங்களை சாப்பிட வேண்டும். இதில் இதில் இருக்கும் சத்துகள் உடல் எடை அதிகரிக்க உதவுகிறது. மூலம் : மூலம் நோய் நாட்பட்ட மலச்சிக்கல் மற்றும் உஷ்ணம் நிறைந்த சூழல்களில் அதிகம் இருப்பதாலும், உலகின் வெப்பத்தை அதிபடுத்தும் உணவு பொருட்களை அதிகம் உண்பதாலும் ஏற்படுகிறது.…

Read More

நட்சத்திரப் பழம் : ஸ்டார் ஃப்ரூட் என்னும் நட்சத்திரப் பழத்தை பலர் அறிந்திருக்க வாய்ப்பு இல்லை. இது சமவெளியில் விளையக் கூடிய பழம். மலைப்பிரதேசங்களில் விளையக் கூடிய பழம். தமிழில் விளிம்பிப்பழம் என்றும் அழைக்கப்படுகிறது. பொதுவாக நாம் செல்லக் கூடிய பழக் கடைகளுக்கு இவை பெரும்பாலும் விற்பனைக்கு வருவதில்லை. நீர்ச்சத்து கொண்ட பழம் : கொடைக்கானல், ஊட்டி போன்ற மலைப்பிரதேசங்களுக்கு சுற்றுலா சென்ற மக்கள் கட்டாயம் இதை ருசித்து பார்த்திருப்பீர்கள். அதிக நீர்ச்சத்து கொண்ட பழம் தான். கலோரி சத்து மிக, மிக குறைவு. அதேபோல கொழுப்புச்சத்து குறைவாகவே உள்ளது. விட்டமின் பி, விட்டமின் சி, பொட்டாசியம், இரும்புச்சத்து, எண்ணற்ற ஆண்டிஆக்சிடண்டுகள் நிறைந்த இந்த பழத்தை இனி கடைகளில் கேட்டு வாங்கி சாப்பிடுங்கள். ஒருவேளை நீங்கள் செல்லும் கடைகளில் இல்லை என்றாலும், எங்கு கிடைக்கும் என்று விசாரித்து வாங்கி விடவும். நார்ச்சத்து கொண்டது : எண்ணற்ற ஊட்டச்சத்துக்களை கொண்டது இந்த ஸ்டார்…

Read More

அறிமுகம் : உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடிய பழங்கள் எத்தனையோ உள்ளது. அதில் இந்த அத்திப்பழமும் ஒன்று. இந்த அத்திபழத்தில் உள்ள பயன்களை நாம் இந்த பதிவில் பார்க்கலாம். சிறுநீரகத்தில் கல்லடைப்பு : சிறுநீரகத்தில் கல்லடைப்பு போன்ற தடங்கல்களை அகற்றிச் சிறுநீரைப் பெருக்குகிறது. பெருங்குடலில் ஆங்காங்கே, இறுகிய கழிவுப் பொருட்களை பக்குவப்படுத்தி, இளக்கி, வியர்வையாகவும், சிறுநீராகவும், மலமாகவும் வெளியேற்றி குடலை மிருதுவாகச் செய்கிறது. ஜீரண உறுப்பு : இந்த பழத்தை நாம் உட்கொள்ளும் போது எளிதில் ஜீரணமாவதுடன் கல்லீரல், மண்ணீரல் போன்ற ஜீரண உறுப்புகளை நல்ல முறையில் சுறுசுறுப்புடன் செயலாற்றச் செய்கிறது. கல்லீரல் வீக்கத்தை குணமாக்க : போதைப் பழக்கம் மற்றும் இதர வியாதிகளால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தை குணமாக்க அத்திப்பழங்களை வினிகரில் ஒரு வாரம்வரை ஊற வைக்க வேண்டும். அதன்பின் தினசரி இரண்டு பழங்களை சாப்பிடலாம். அத்திப்பழத்தில் இந்த சத்துக்கள் : தினசரி இரண்டு அத்திப்பழங்களை சாப்பிட்டு வந்தால், உடல் கொழுக்,…

Read More

அறிமுகம் : இந்தியாவே மூலிகைகள் நிறைந்த தேசம்தான். நம்நாட்டில் கிடைக்கும் மூலிகைகளே நமது நோய் தீர்க்கும் மருந்தாக உள்ளன. காடு, மலைகளில்தான் மூலிகைகள் வளரும் என்பதில்லை. சாலையோரங்களிலும்,வயல்வரப்புகளிலும் கூட மூலிகைகள் தானாக வளர்ந்து நிற்கின்றன. வேலிகளில் படர்ந்து வளரும் பிரண்டை எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. பிரண்டை இந்தியா, இலங்கை, வங்காளதேசம் போன்ற நாடுகளில் அதிகம் காணப்படும் கொடியாகும். பிரண்டை வகைகள் : இதில் ஓலைப்பிரண்டை, உருண்டைப் பிரண்டை, முப்பிரண்டை, சதுரப் பிரண்டை, களிப்பிரண்டை, தீம்பிரண்டை, புளிப்பிரண்டை என பல வகைகள் உள்ளன. முப்பிரண்டை கிடைப்பதற்கரியது. இது மலைப் பகுதியில்தான் அதிகம் காணப்படும். இதன் தண்டு, வேர், பழம் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டது. மருத்துவ மூலிகை : இலைகளும், இளம் தண்டுத் தொகுதியும் உடல்நலம் தேற்றுபவை. வயிற்றுவலி போக்க வல்லது. இதன் பொடி ஜீராணகோளாறுகளுக்கு மருந்தாகிறது. தண்டின் சாறு எலும்பு முறிவுகளில் பயன்படுகிறது. ஒழுங்காக மாதவிடாய் வராத கோளறு, ஆஸ்துமா,…

Read More