அறிமுகம் :
![](/wp-content/uploads/2023/06/302.jpg)
உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடிய பழங்கள் எத்தனையோ உள்ளது. அதில் இந்த அத்திப்பழமும் ஒன்று. இந்த அத்திபழத்தில் உள்ள பயன்களை நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.
சிறுநீரகத்தில் கல்லடைப்பு :
![](/wp-content/uploads/2023/06/218-1024x708.jpg)
சிறுநீரகத்தில் கல்லடைப்பு போன்ற தடங்கல்களை அகற்றிச் சிறுநீரைப் பெருக்குகிறது. பெருங்குடலில் ஆங்காங்கே, இறுகிய கழிவுப் பொருட்களை பக்குவப்படுத்தி, இளக்கி, வியர்வையாகவும், சிறுநீராகவும், மலமாகவும் வெளியேற்றி குடலை மிருதுவாகச் செய்கிறது.
ஜீரண உறுப்பு :
![](/wp-content/uploads/2023/06/217.jpg)
இந்த பழத்தை நாம் உட்கொள்ளும் போது எளிதில் ஜீரணமாவதுடன் கல்லீரல், மண்ணீரல் போன்ற ஜீரண உறுப்புகளை நல்ல முறையில் சுறுசுறுப்புடன் செயலாற்றச் செய்கிறது.
கல்லீரல் வீக்கத்தை குணமாக்க :
![](/wp-content/uploads/2023/06/216.jpg)
போதைப் பழக்கம் மற்றும் இதர வியாதிகளால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தை குணமாக்க அத்திப்பழங்களை வினிகரில் ஒரு வாரம்வரை ஊற வைக்க வேண்டும். அதன்பின் தினசரி இரண்டு பழங்களை சாப்பிடலாம்.
அத்திப்பழத்தில் இந்த சத்துக்கள் :
![](/wp-content/uploads/2023/06/300-1-1024x576.jpg)
தினசரி இரண்டு அத்திப்பழங்களை சாப்பிட்டு வந்தால், உடல் கொழுக், மொழுக் என்று வளரும். இதில் முழு அளவு ஊட்டச்சத்து இருக்கின்றது. இதில் புரோட்டீன், சர்க்கரை சத்து, கால்ஷீயம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச் சத்து அதிக அளவில் இருக்கிறது. அதாவது மற்ற பழங்களைவிட அத்திப்பழத்தில் இந்த சத்துக்கள் நாலு மடங்கு அதிகமாக உள்ளது. இதைத் தவிர வைட்டமின் ஏ, வைட்டமின் சி அதிக அளவில் உண்டு.
உலர்ந்த அத்திப் பழம் :
![](/wp-content/uploads/2023/06/301-1.jpg)
உலர்ந்த அத்திப் பழங்களை தேனில் ஊற வைத்து சாப்பிட்டால் அளவற்ற போஷாக்கை பெறலாம். உலர்த்திப் பொடி செய்து ஒரு ஸ்பூன் வீதம் பாலில் போட்டும் சாப்பிடலாம்.